மூத்த கவிஞர். வண்ணை தெய்வம்..

மண்ணையும் மக்களையும்
நேசிக்கும் பலரோடு
தன் ஊரையும் உறவுகளையும்
நெஞ்சிலும் சுமப்பவர்களில்
வண்ணையும் ஒருவராவார்..

சிறந்த நாடக நடிகர்
எழத்தாளர் இயக்குனர்.
பெயர் சொல்லக் கூடிய
முன்னணிக் கவிஞர்களில்
ஐரோப்பாவில் மூத்தவர்.

கலைக் காவலர்
மனிதருள்.பட்டங்களின்
பட்டியல் நீளும். இவரது
தமிழ் பண்ணையில் தமிழ்
நாற்றுக்களை அறுவடையாக்கியவன்..

உருவகக் கதைகளை
எழுதிக் குவிப்பவர்.அவற்றில்
பல எனது நாடகங்களுக்கு
மூலக் கருக்களாகி நாடகப்
பிரதிகளாக உயிர் பெற்றன..

தானும் எழுதி கூடப்
பழகுவோரையும் எழுதப்பழக்கும்
முதல் மனிதனும் பண்பாளனுமாவார்.
இவரை நீடூளி வாழ வாழ்த்தி மேலும்
இவரது கவிதை நூல்கள் வெளி வர
வேண்டுமென உரமிடுவோம் வாரீர்.