வறுமை!கவிதை ஜெசுதா யோ

காதல் வந்தால் தான்
கவிதை வருமா ?
வறுமை வந்தாலும்
வரிகள் இனிக்கும்

வாடிய வயிறும்
தவிக்கும் மனதும்
தத்துவம் இல்லையென்றாலும்
தவிப்போடு சொல்லியிருக்கும்

எங்கும் வறுமை
எதிலும் வறுமை
வீடின்றி உணவின்றி
நீரின்றி எல்லாம் வறுமை

வறுமை வறுமை
வாழ்க்கையில் ஒரு பாகம்
ஆனாலும் தொடரும்
வாழ்க்கைப் போராட்டம்

ஏழ்மையில் வாழ்ந்தவன்
தாழ்மையோடு தன்னை நினைக்கிறான்
தன்னம்பிக்கை இழந்து
தள்ளாடும் வறுமை
அவன் உணவு தட்டில்
சம்மணம் இட்டு இருக்கிறது

ஆக்கம் ஜெசுதா யோ