வாழ்வின் விளக்கங்கள்

முதிர்ந்த இலைகளாகி நாமிருவரும்
முதுமையடைந்து இன்று
முழுமையடைந்த வாழ்வில் நன்று
முற்றுப்பெறக் காத்து நின்று,
.
உதிர்ந்து விழ எத்தனிக்கும்
உறுதியற்ற நிலையையைடைந்த
உலர்ந்த சருகிலைகள் ஆகியே
உலவுகிறோம் அன்பே .
.
பகிர்ந்து கொண்டோம் எம்
பாச பந்தங்களையும்
பட்ட இன்பதுன்பங்களையும்
பாதிபாதியாக, பாரபட்சமின்றியே .
.
புரிந்துகொண்டு வாழ்ந்த எம்
புனிதமான வாழ்வானது ,
புண்ணியம் பெற்ற அழகிய
பூங்கொதுப்போன்றது ,
.
விரிந்த உலகமதில் நாம்
விருப்பப்படி வாழ்ந்து இறுதியில்
விடைபெறக்காத்திருக்கும், விளக்கங்களானோம் பலருக்கு.
.
முதிர் நேசன்