விழிதிறந்து பாருமே

கருமேகம் கண்விழித்து
மழை சொரியும்
கார்த்திகை தெய்வங்களின்
மனம் நிறையும்
கண்ணீரில் விளக்கெறித்தோம்
கல்லறையில்
கை தொழுதே விழி புதைந்தோம்
உம்மிடத்தில்
கார்த்திகையின் வேந்தரே
கைதொழுதே வந்துள்ளோம்
கண்திறந்து பாராயோ
கண்ணீர் வழியும் முன்னே

விழி திறந்து பாரும் எங்கள்
வலி அறிந்து வாருமே
மொழி இழந்து நாங்களே
வழிதளர்ந்து போகிறோம்

தே.பிரியன்