வெற்றி

வெற்றி என்ற மூன்றெழுத்தோடு
தன்னம்பிக்கை என்ற ஏழெத்தும்
சேரும் போது தான் உச்சம் அடைகிறது

வெற்றி சுலபமாக கிடைத்துவிடாது
கிடைத்துவிட்டால்
வெற்றியென்று
சொல்லக்கூடாது

முயன்று பெறு
உன்னை பழித்தவனும்
உன்னைப் பார்த்து
பெருமைகொள்வான்

தோல்வி வந்தால்
துவண்டிடாதே
அருகில் வெற்றி என்பதை
மறந்திடாதே

கடவுள் தந்த மூளையை
மூலையில் போட்டுவிடாதே
குறிக்கோளோடு செயல்படு
லட்சியப் பயணம் அருகில்த்தான்

இடர் வரினும் தளர்ந்திடாதே
மனவலிமை கொள்
சோதனையிலும் சாதனை காண்
உன் கழுத்தில் விழும்
வெற்றி மாலைகளே

நம்பிக்கை
உன்னை நீ நம்பு
பிறரைவிட உன் உழைப்பின்
வேகம் அதிகமென நினை
அதுவே உனக்கான வெற்றியின்
படியாகும்

முயற்சி குறிக்கோள்
நம்பிக்கை இத்தனையும்
உண்டென்ற பின்
உன்னைத் தொடர்ந்து வரும்
வெற்றி உனதாகும்,..

.ஜெசுதா யோ.