வைத்தியன்

கண்டவனெல்லாம்
வைத்தியன்
ஆகிவிட்டான்
ஐயோ எனக்கு
பைத்தியமே
பிடிக்கப்போகுது
இஞ்சிஉள்ளி
மஞ்சல் மிளகு
பொடியாக்கி
இரசம் வைத்து
குடி,அடிக்கடி
சுடுதண்ணிகுடி
கவனம் இருமுறாய்
தேசிக்காய்
தேன்கலந்துகுடி
வெளியிலபோகாதை
எதுக்கும் ஒருக்கா
உடம்பை வைத்தியரிடம்
கொண்டைக்காட்டு
வயசும் அறுபதைத்தாண்டுது
உந்தவயதுக்காரருக்குத்தானம்
உந்த பாழான கொறோனா
தாக்குதாம்
பிரான்சிலைதானாம்
சாவுகூடவாம் என்று
குறுக்காலை போவார்
ரெலிபோன் எடுத்து
சுகம் கேட்டுவிட்டு
இத்தனையும் சொல்ல
எனக்கு ஏக்கத்திலை
காய்ச்சலாய்ப்போச்சு
இவை சுகம் கேக்குனமோ
எங்களை சுகயீனம்
ஆக்குகினமோ
பயமுறுத்திபோட்டுபோகினம்
தாங்கமுடியேல்லை
எனக்கு ஒன்றுமில்லை என்று
சொல்லத்தெரியேல்லை
இடைக்கிடை காச்சல்வருகுது எல்லாம்இந்த பிரளுவாராலை
ஏக்கக்காய்ச்சல்தான்
வந்தது என்று நினைக்கிறன்
(மயிலங்காடுஇந்திரன்)