எனக்குள் வந்தாய்,..

எங்கிருந்தாய் எப்படி
எனக்குள் வந்தாய்,..
உன் ஓரவிழிப்பார்வையிலே
என் உயிரே பறிபோனதே,.
மீட்காமலே இசையாகிறேன்
உன் கை படாமலே…
உனக்குள் மயங்கினேன்
என்னையறியாமலே
உன் புன்னகையில்….
உன்னைச்சுற்றி ஆயிரம்
உறவுகள் இருக்கலாம்
உன்னிதயத்தில் நான் மட்டுமே
உயிரானவள்,…
இந்த சொந்தம்
நித்தம் வேண்டும்
நிலையாகவே என்னுயிரே
ஜெசுதா யோ