எங்கு போகிறோம்

நீ மூச்சு விட்டால்,
நான் முணுமுணுப்பேன்,
நீ முணுமுணுத்தால்,
நான் உரக்கப் பேசுவேன் ,
நீ உரக்கப் பேசினால்,
நான் கூச்சலிடுவேன்.
நீ கூச்சலிட்டால் ,
நான் உன்னை கிள்ளுவேன்.
நீ என்னை கிள்ளினால் ,
நான் உன்னை அடிப்பேன்.
நீ என்னை அடித்தால்,
நான் உன்னை கொல்லுவேன்.
நீ என்னை கொன்றால்.
என் மக்கள் உன் மக்களை பழி தீர்ப்பார்கள் !!!!
வாழ்க மாதங்கள் !!!
வாழ்க நாட்டுப்பற்று!!!
வாழாதிருக்கட்டும் மக்கள் மட்டும்..
***
பழி நேசன்