தமிழ் வளர்த்த சான்றோர் விழா ஆஸ்ரேலியா, சிட்னியில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா நேற்று 28-04-2018 ஆஸ்ரேலியா, சிட்னியில் நடைபெற்ற சான்றோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் ஈழத்து சி வை தாமோதரம்பிள்ளை, கவிஞர் கண்ணதாசன் இருவரையும் கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், சிறப்புப் சொற்பொழிவுகள் என சிறப்பாக நடைபெற்றது. இதை சிட்னி தமிழ் சங்கம் நடாத்தியது, கலாநிதி இளமுருகனார் பாரதி ஒருங்கமைப்பாளர். வைத்திய கலாநிதி யதுகிரி லோகதாசன் குழுவினர் இனிய கர்நாடக இசையால் செவிகளுக்கு விருந்தளித்தார்கள். திரு ஆறு திருமுருகன் அவர்கள் சி வை தாமோதரம்பிள்ளை தமிழுக்கு செய்த அருந்தொண்டை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். திரு பகவதாஸ் சிறீஸ்கந்தராசா கண்ணதாசன் பெருமை பற்றி சொற்பொழிவாற்றினார். ஒரு நிறைவான நிகழ்ச்சி பார்த்த நிறைவுடன் வீடு வந்தேன்.