நிலவே என் கனவில்

உன்னை கண்ட நாள் முதலா- என்
கண்ணுரெண்டும் தகராறு
உந்தன் கண்கள் பேசும் வார்த்தைகள்
என்றும் எனக்கு வரலாறு…

எண்ணி ஏங்கும் போதெல்லாம் – உன்
எண்ணம் என்னுள் தேனாறு…
உந்தன் நினைவை அணைத்துத் தூங்கிறேன்
 வந்து நீ நீராடு…

கன்னி உந்தன் பிம்பம்
என்னை விட்டு நீங்காது
மண்ணில் உன்னை விட்டு
உடலில் என்னுயிரும் தூங்காது

கவித்தென்றல் ஏரூர்