பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா !

யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய முதல்வர் திருமதி க.சுலபாமதி அவர்களின்தலைமையில் இடம்பெற்றது. பரிசளிப்பு விழாவின்
பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு சபா குகதாஸ் அவர்களும்,சிறப்பு விருந்தினராக திரு க.சந்திரலிங்கம் (வலிகாமம் வலய தமிழ் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறுவுநர் நினைவுப்பேருரையை வைத்திய கலாநிதி திரு ச.சாரங்கன் அவர்கள் நிகழ்த்தினார்.