அந்த நிமிடங்களில் கரைகிறேன்…

அந்த மஞ்சள் வெய்யிலும்
வெட்கியது சில கணம்
மாங்கனி நிறத்தழகில்
அவளைக் கண்டு…

அழகைக் கண்ட
மரங்களெல்லாம் வரிசையாக
நிழல்தரக் காத்திருக்க
அந்த ஒற்றை மரம் பெற்றதடி
அற்புத வாய்ப்பை…

பூங்காவின் பூக்களுக்கு மட்டும்
ஏதோ ஒரு ஏக்கம்
பூவை அவள் கூந்தலில்
இடம் ஒன்று கிடைக்காதா என்று..

ஓயாமல் வீசும் தென்றலும்
ஒரு தடவை தடக்கி வீழ்ந்தது
அவள் பாதச் சுவட்டில்
பூங்காவை அவள் கடந்த போது…

என் பார்வைகள் மட்டும்
பாக்கியம் பெற்றது
அந்தப் பூங்காவைப் போலே…

வேலணையூர் ரஜிந்தன்.