அபிநயம்..?

சிலருக்கு
விடை தெரிவதில்லை.
பலருக்கு
வினா புரிவதில்லை.
ஆனாலும்
விடை தேடும்
பயணம் தான்
அழகான வாழ்க்கை..
கற்கால
மனிதன் கல்லுரசி
தீமூட்டி
சோறாக்கினான்
இக்கால
மனிதன் சொல்லுரசி
தீமூட்டி
ஊறாக்குகின்றான்.
புரிந்து
கொள்ளாத வரையில்
தெரிந்து கொள்
எதுவுமே உன்னுடன்
நிலைக்காது.
புரிந்து கொண்டால்
அடிக்கடி
உன்னை விட்டு
விலகாது வதைக்காது.
நம்பிக்கையின்
அறுவடை வெற்றி.
ஆனாலும்
வெற்றி
நம்பிக்கையுள்ளோரிடம்
மட்டுமே வரும்.
வாழ்க்கை
மாறலாம்.அந்த
நாள் நாளையுமாகலாம்.
நம்பிக்கை வை
அது தான் வாழ்க்கை..
அதுவரை
தொடரும் வாழ்வியலின்
அபிநயம்..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி