விலகத் துடிக்கின்றது.!

கலகமே ஆழும்
இவ்வுலகில்
வடிவங்கள் தினம்
பல ரகம்..
பழக்கம் தேய
விளக்கம் குறைய
விரிசலே விரும்பி
வரவேற்கின்றது.
உறவு என்பது
அழகிய புத்தகம்.
தவறு என்பது
அதில்
ஒரு பக்கமாகலாம்
அந்த ஒரு பக்கத்துக்காக
புத்தகத்தை
இழந்தவர் கோடி..
தப்பான
தரைகளில்
தாவரங்கள்
தளைப்பதில்லை.
புரியாத
மனங்களில்
சந்தோஷங்கள்
நிலைப்பதில்லை.
இதய நோய்
என்பது இதயத்தால்
வருவதில்லை.
இனித்து வாழ
இஸ்டமிலா மனிதர்களால்
வருவதே. வலிகள்
வாழ்க்கையில்..
வலிகளே
வாழ்க்கையானால்..?
மாரியில்
தோன்றும்
காளான்கள்
கொடையிலும்
தளைக்குன்றன.
தர்மசங்கடங்கள்
தலையில்
கூடு கட்டுகின்றன.
காரணமில்லா
கலகங்கள்
தோரணம் கட்டுகின்றன.
மாற்றங்கள்
ஏற்றம் கொள்ளட்டும்
மனங்கள்
மகிழ்வுறட்டும்
வாழ்வு மலர
கொண்டாடுவோம்.

ஆக்கம் ரி.தயாநிதி