****ஆசைகளை-கொன்றேன் ****

பறந்து பாடித்திரியும்
பள்ளிப்பருவத்தில்த் தான்,
பாவையே உன்னை நான் 
பார்த்ததும் பரவசமானேன்.
.
திறந்து பார்த்திட வேணும் 
திலகமே உன்மனதை என, 
தினந்தினம் நானுமோ
தீராத ஆசைகொண்டலைந்தேன் .
.
துறந்தேன் என் கல்வியையும் 
தூரவைத்தேன் நல்கலைகளையும், 
தூயவளே உந்தன் எல்லையற்ற
துணைக்காகவே ஏங்கி நின்றேன்
.
மறந்து விட முடியாது என் 
மனதிலுள்ள உன் நினைவுகளை, 
மவுனமாகவே வைத்து நானும் 
மாய்த்திட ஆசைகொண்டேன். 
.
வறண்ட இதயத்தோடு என்னை-
வாட்டிவதைத்து ,மகிழ்ந்து நீ
வாழ்ந்தாலும், நானோ உன்மீதே
வாஞ்சை கொண்டு,வாழாதிருந்தேன்.
.
பிறந்ததே இம்மண்ணில் இந்த 
பிறவி ,உனக்காகவே என்று 
பிதற்றும் என் நெஞ்சுக்கு நீயும் ,
பிரியாவிடை கொடுத்ததேனோ,
.
மறந்து கூட எனக்காய் நீயும்,
மருந்தளவேனும் உன் கண்ணீரை 
மல்கிட மாட்டாயோ என நானும்
மரத்துப் போகிறேனடி மானே.
.
உறைந்துகிடக்கும் எந்தன்
உள்மன ஆசைகளைக்கொன்றேன்.
உனக்காய் என்றும் என்னிதயத்தை 
உறுதியாய் பேணிவந்தேன் கண்ணே.
.
இறந்து பார்க்க ஆசைப்படுகிறேன் 
இதயமே நானும் ,ஒருமுறையேனும் 
இரக்கத்தோடு எனைத்தேடி நீயும்,
இங்கு வருவாயெனும் அற்ப ஆசையில்.
.
ஆசை நேசன்