**என்னில் நீ தொலையும் நாளிது **இல்லநேசன்

கண்ணில் கொண்ட அன்பு மெல்ல இன்று
……காதலாகிக்கனிந்து கசிந்தது கண்ணே.
விண்ணில் நானும் பறப்பது போலிங்கு
….வியாபித்தது என்வீணான கற்பனைகள்.
பெண்ணில் என்ன இன்பம் என்பதை நான்
…..பெயரளவில் புரிந்திருந்த காலம் போய்
உன்னில் எந்தன் உயிரைக்கண்டு இன்று
…உன்னால் உயர்ந்து நிற்கிறேன் கண்ணே.
மண்ணில் நல்ல மாளிகை அமைத்து அதில்
……மங்கள விளக்குகளும் ஏற்றி உனக்காய்
என்னில் நீ தொலையும் அந்த எழில்மிகு
….ஏகாந்தநாளுக்காய் ஏங்கிநிற்கிறேன் வா
ஆக்கம் இல்லநேசன்