ஈழத்து தமிழ் சினிமா என்றதொரு அடையாளம் ஏற்படும் அளவிற்கு இங்கிருந்து திரைப்படங்கள் வெளிவரவில்லை என்ற நிலை இருந்தபோதும் பல்வேறு திரைப்பட முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கதொரு விடயம், ஈழத்தில் நிறைய பெண் இயக்குனர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது அறிமுகமாகிறார் லோஜிகா கோபாலசிங்கம். ஏற்கனவே உம்மாண்டி முழுநீள திரைப்படம் உட்பட பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் மூலம் நடிகையாக அறிமுகமான லோஜிகா தற்போது இயக்குனராக தனது ஆற்றலை வெளிப்படுத்தவுள்ளார்.
இவரது இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று (05.10.2018) வெளியாகவிருக்கிறது “தலைமுறை மாற்றம்” குறும்படம். அரங்கம் சார்பில் லோஜிகாவுக்கு வாழ்த்துக்கள்.