உண்மை உருவமதை உணராநிலை இது

உண்மை உருவமதை
உணராநிலை இது
பொய்மை பெருக்கெடுத்து
புலரும் விடியலிது
மெய்கள் குழிதோண்டிப்
புதைத்த தேசமிது
தமிழன் நாமமதை மட்டும்
உயர்த்தும் காலமிது

நல்லவை மருகி
நடுத்தெருவில் விட்ட கதை
வல்லவை எல்லாம்
வழிமாறி போன நிலை

போடும் உனதாட்டம் பொறு -எம்
வாழ்வை மீட்டெடுக்கும் வரை
கிழியும் முகத்திரைதான் அன்று
ஒழியும் உன் முகவரிதான்

நீ என்றும் தமிழாயிரு

இதை உணர்ந்து உன்னை வெல்
நாம் என்றும் வல்லவரே
இனி நெஞ்சை நிமிர்த்திச் சொல்

தே.பிரியன்