உயர்ந்த வாழ்க்கை 

உற்றார் எல்லாம் தனக்கு
உண்மையானவர்களாகவும் ,
உறவினர் யாவரும் என்றுமே தனது 
உரிமையானவர்கள் எனவும்,
உத்தேசித்து வாழும் மனிதனோ,
உலகின் நிஜத்தை அறிந்து கொண்டதும்
உடைந்து போகிறான் வாழ்விலே !!
உறவுகள் எல்லாம் பூமியில்
உடன் வாழவந்த வெறும்
உயிரினங்களே என்னும்,
உண்மையை எவன்
உணர்ந்து கொள்கிறானோ அவனே !!,
உன்னதமாக வாழ்ந்து எப்போதுமே ,
உயர்ந்து நிற்கிறான், வாழ்க்கையிலே…

உடைந்த நேசன்