*சொல்வதெல்லாம் உண்மை*

அன்றும் இன்றும்
என்னை வாழ்த்தும்
இருகலைமலைகள்
தேசத்துப்பாடகர்
என்நண்பர் சுகுமார்
என்கலைக்கும்
பாடலுக்கும் ரசிகன்
என்று வாழ்த்தியது
எனக்கு தேசத்துவிருது
அண்ணனாய் ஆசானாய்
நண்பனாய் தோழனாய்
விமானமே அவர்வழிப்பாதை
கலைச்சிகரம் நடிகர்
இயக்குனர் கவிஞர்
திரு தயாநிதி அண்ணனின்
பாராட்டைப்பலமுறை
பெற்றவன் நான்
இவரின் ஆசியும்
எனக்கு பெருவிருது
இவர்கள் காலத்தில்
வாழ்வதே பெருமை
அதிலும் இவர்களோடு
கூடிப்பாடியது நடித்தது
எனக்கு இறைவன் தந்தவரம்
இப்படி இன்னும் பல பெரும்
கலைஞர்களோடு நான்
இணைந்ததை விரைவில்
பதிவு செய்கின்றேன்

>மயிலங்காடு இந்திரன் >