உருவமில்லை.கவிஞர் தயாநிதி

உயிருண்டு
உணர்வுண்டு
பெயருண்டு
பொய்யுண்டு
உண்மையுமுண்டு
உருவம் மட்டும்
இல்லாதது..!!
….
சர்வத்தில்
கர்வத்துடன்
அடங்க மறுப்பது
மரணம் வரை
சரணம் சொல்ல
வைப்பது…..

உறவுகள்
உடைத்து
உண்மைகள்
மறைத்து உன்னை
மயங்க வைப்பது….

கடமைகள்
கலைத்து
உடமைகள்
தொலைத்து
ஏங்க வைப்பது….

நினைவுகளை
நிறுத்தி
கனவுகளை
மாற்றி
நிழலோடு
உன் புலம்பல்
பெருக்குவது….

அமைதி கலைத்து
ஆசையை அழித்து
நேசம் நொருக்கி
நெருக்கடி யைக்
கூட்டிக் குழப்பி
நொந்தழ வைத்திடும்
கருவி உருவமில்லாக்
காதல் ஒன்று தான்…!

ஆக்கம் கவிஞர்தயாநிதி