உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் பல்துறைக் கலாவித்தகன் பூ.பிரதீபன்

கம்போடியா நாட்டில் அங்கோர்வாட் மாநகரில் எதிர்வரும் 20.09.2019 தொடக்கம் 23.09.2019 வரை பன்னாட்டு தமிழர் நடுவம் அங்கோர் தமிழ்ச்சங்கம் மற்றும் சீனு ஞானம் ட்ரவல்ஸ் ஏட்பாட்டில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் எமது ஈழத்துக் கவிஞரும் நாடக அரங்கியல் ஆற்றுகைக்கலை பயிற்றுவிப்பாளரும் ஆற்றுப்படுத்துகை வளவாளரும் படைப்பாக்க இயக்குநரும் நடிகரும் பாடகரும் என மேலும் பல்துறைக் கலாவித்தகருமான எங்கள் ஆசான் பூ.பிரதீபன் அவர்களும் ஒருவராக நியூசிலாந்திலிருந்து சென்று கலந்துகொள்ள இருப்பதை மிகவும் பெருமிதத்துடனும் அகமகிழ்வுடனும் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் நெஞ்சனாய் கலை நேசனாய் நேர்வழியும் நெஞ்சுரமும் அன்பும் ஒழுக்கமும் ஆற்றலும் நற்பண்பும் நட்புடன் இன்முகத்துடன் பழகும் பாங்கும் கொண்டு வாழும் உங்களை வாழ்த்துவதில் எண்ணற்ற மகிழ்சி !