கண்ணில் வந்து காதல்!கவிதை கவித்தென்றல் ஏரூர்

கண்ணில் வந்து காதல் செய்தாய்
காதல் கொள்ள கண்ணைக் கொய்தாய்
கனவில் வந்து என்னைக் கொன்றாய்
கவலை கொண்டேன் என்ன செய்தாய்

கண்ணீரில் கன்னம் கரையாதடி..
கண்மைக்குள் கண்கள் உறையாதடி
கண் கண்ட காட்சி மறையாதடி
கல் நெஞ்சம் கொண்டு அலையாதடி

கனக்கின்ற இதயம் ஒன்றல்லவா
களவாட முயன்றேன் உனதல்லவா
கலையாத மேகம் இருளல்லவா
கண்ணே உன் தேகம் கவியல்லவா

கையொன்று ஓசை தருவதில்லை
கை சேர ஆசை விடுவதில்லை
கைதேசமாக்கும் பொருள் காதலில்லை
கவித்தென்றல் வார்த்தை கவிதையில்லை

  ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்