மரண அறுவடைகள்…!கவிதை கவிஞர் தயாநிதி

நித்திரைக்கு
நித்தம் ஒரு
மாத்திரை.!
பசிக்கவில்லை
மதியம் ஒரு
மாத்திரை!
தலை வலிக்கு
மாத்திரை.!
உடல் வலிக்கு
மாத்திரை.!
தாம்பத்தியத்துக்கு
மாத்திரை..!
இவ்வாறு சகல
இயங்கு நிலைக்கும்
மாத்திரை ! மாத்திரை!
இறுதி யாத்திரை
வரை மாத்திரை.!

அவசர உணவுக்
கடைகள் பெருகி
ஆசைகளையும்
அழிவுகளையும்
ஊட்டி உண்மையில்
உலகம் கலகத்தில்.
வலிந்த சுமைகளால்
வாழ்க்கை பெரும்
போராட்டமானது.!

இயல்பு நிலையை
மாற்றி சத்துணவை
ஓரம் கட்டி! சாத்தியமில்லாத
விளம்பர மோகத்தில்
மூழ்கி கலர் கலராய்
கைப்பைக்குள்
மாத்திரைகள்..!
வியாபார யுக்தியால்
மரண அறுவடைகள்.!

ஆக்கம் கவிஞர்தயாநிதி