***கண் காணாத கண்ணீர் ****கவிதைஆண்நேசன்

அன்புக்காய் எப்போதுமே எங்குவத்திலும்,
பண்புக்காய் எதையுமே இழப்பதிலும்,
நட்புக்காய் விட்டுக்கு கொடுப்பதிலும,்
நாட்டுக்காய் போராடுவத்திலும் ,
வீட்டுக்காய் மாடாய் உழைப்பதிலும்
குடும்பத்துக்காய் என்றும் வாழ்வதிலும்
ஆண்களே தலை தூக்கி நின்றாலும்
பெண்களின் சிலதுளிக் கண்ணீரில்
வண்ணங்கள் வேறாய் மாறிவிடுகின்றது.
பெண்கள் தலையில் கிரீடம் ஏறிவிடுகிறது
தன்னகத்துக்குள் மட்டுமே அழும் ஆணை
எண்ணத்தாலும் போற்றாத பூமியடா இது.
கன்னங்களில் படுமளவு கண்ணீர் விட
ஆண்கள் பழகி கொள்ள வேண்டியிருக்கு .

ஆக்கம் ஆண்நேசன்