கனவுகள் ஆயிரம்!கவிதை நகுலா சிவநாதன்

ஆயிரம் கனவுகள் ஆழ்மனதில் உதயம்
அத்தனையும் நிறைவேறுமா
இத்தரையில் வாழ்வதற்கு

நித்திரையில் வந்திடும் நித்தமும் கனவு
சொர்ப்பனமாய் அதுவும் சொக்கிவிடும் மனதை
கற்பனையில் வந்திடும் காதல் கனவு
கச்சிதமாய் நித்திரையுடன் முடிந்தும் விடும்

இலட்சியக்கனவு காணுங்கள் என்றார் கலாம்
கனவுதான் பலருக்கு காரியத்தை நிறைவேற்றியது
உண்மைக்கனவு கண்டுபிடிப்பிற்கு வித்தாகியது கலாமுக்கு
எடிசனின் மனதில் உதித்த கனவு மின்விளக்காய் மாறியது

கனவுகள் ஆயிரம் மனதில் வரும்
களிப்போடு நீர்க்குமிழி ஆவதுமுண்டு
இலட்சியக்கனவு இங்கித வானில் சஞ்சரிக்க
இயன்றவரை கனவு இடைவிடாது வரணும்

அறிவியலில் கனவு அடிக்கடி வரணும்
அடுத்த சந்ததி சாதனை படைக்கணும்
கனவுகள் ஆயிரம் மனங்களில் துளிர்க்கணும்
கனிவோடு ஒன்றாவது நனவாகணும்

ஆக்கம் கவி- நகுலா சிவநாதன்