கலைக் கண் பாலா….Germany

நாடகக் கலையில்
நாட்டம் அதிகம்.
தான் வாழும் தளத்திலும்
மக்கள் மனதில்
எழும் குழப்பத்திற்கும்
மருத்துவம் பார்க்கும்
இவரது நாடக் கலை..

பல இளைஞர்களை
தன் வசப்படுத்தி
பிராங்போட் தமிழ் மன்றம்
மூலம் சிறந்த நாடகங்களை
அரங்கேற்றிய ஆசான்..

கலைக் கண் எனும்
வீடியோ பத்திரிகையை
யேர்மனியில் ஆரம்ப காலத்தில்
ஆரம்பித்தவரும் பாலா
என்பது மிகையல்ல.

இருபத்தைந்து வருடங்களுக்கு
முன்னராக எனது உணர்வுகள்
எனும் நாடக நூலை
வீடியோ நாடகமாக்கி
என்னையும் எங்கள் மூத்த
பெண் நடிகை காலம் சென்ற
திருமதி நீலாட்சி அம்மாவையும்
அழைத்து தன்னோடு இணைத்து
நடித்து திரையிட்ட இயக்குனராவார்.

பழகிடப் பண்பானவர்
பல படைப்பாளிகளுக்கு
முன் உதாரணமானவர்
குறும் படங்கள் பல உதயமாகிட
வித்திட்ட பெருமகன். இவரை
வாழ்த்தி மேலும் ஊக்கம்
கொடுப்பது நம் கடனாகும்.
வாருங்கள் உறவுகளே வாழ்த்துக்களால்
உரமிடுவோம்…

22.10.2017-கலைஞர் தயாநிதி.