கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் “ என் மனவானில்“ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகும் கொண்டுள்ள கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் “ என் மனவானில்“ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள குயின்ஸ் பெலஸ் விழா மண்டபத்தில் சிற்பபாக நடைபெற்றது.

பண்டதர் மா. செ. அலெக்சாண்டர் அரங்கு எனப் பெயரிடப்பட்டு இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு கவிநாயகர் வி. கந்தவனம் தலைமை தாங்கினார்.

கனடாவில் உள்ள அச்சுவேலி மக்கள் ஒன்றியம் மற்றும் கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் குடும்பத்தினர் ஆ கியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அற்புதமான நிகழ்வில் உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆ ர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் ஈஸ்ட் எப்எம் 102.7 அதிபர் நடா இராஜ்குமார் முறையே பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.

பல அறிஞர்கள் மற்றும் கவி;ஞர் எழுத்தாளர் ஆகியோர் சபையோரைக் கவர்ந்த உரைகளை ஆற்றினர்.
இடையில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. எழுத்தாளர்கள் க. நவம், அருள் சுப்பிரமணியம், கணபதி இரவீந்திரன், டாக்டர் போல் ஜோசப் உட்பட பலர் உரையாற்றினர்.

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்இ
கனடா உதயன் செய்திப் பிரிவு