குளிர்காலவெண்பனி!கவிதை ஜெசுதா யோ

விண்ணிலிருந்து மண்ணுக்குவரவில்லை
ஆனாலும் குளிர் மட்டும்
உறைந்து கிடக்கிறது

உடல்களெல்லாம் விறைத்து
உதடுகளெல்லாம் வெடித்து
உருவம் மாறியே ..
ஆணென்றும் பெண்ணென்றும்
அடையாளம் தெரியாது
மூடிய உடையில்
முக்காடு வேறு…

இருந்தும் ஓய்வில்லை
ஓடுகிறான் மனிதன்
வேலைப்பழுவில்
எல்லாம் மறந்து வாழ்கிறான்..

உறவுகளுக்காய்
ஓய்வின்றி தினம் தினம்
முடியாத பயணமாக
தொடராகிப் போகிறது..

பாதி வயதில் பாழப்போன நோயும்
வாழ விடாது வலிகொடுத்து
பறித்துச் செல்கிறது
பலரது உயிர்களை…

வேதனை_வெளிநாடு

  ஆக்கம் ஜெசுதா யோ