கை நூல்..!

வாழ்க்கைப்
பயணத்துக்கு
காதலும் ஓர்
கை நூல் தான்..!

பார்க்காத
கடவுளுக்கும்
போகாத
சொர்க்கத்துக்கும்
மேலானது
காதல்..!

இரு மன
யுத்தம்
ஒரு மனமாகி
சத்தமில்லாத
சமரசம்
காதலாகி
கசிந்து கைதிகளாகி
திருமணச்
சிறையில்…

காதல்
பட்டதாரிகளுக்கு
தொழில்
நியமனம்
மண வாழ்க்கை.

இள வயதில்
காதல்
எழவில்லையெனில்
உடலிலும்
மனதிலும்
கோளாறென்பது
உளவியல்
தீர்ப்பாகும்
காதல் என்பது
வாழ்க்கை
வழங்கிய வரம்;

கவிஞர் தயாநிதி