கௌசலா ஆனந்தராஜா அவர்கள் தனது 50 வது அரங்கேற்ற மாணவியை மேடையேற்றி னார்.

பரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி கௌசலா ஆனந்தராஜா அவர்கள் தனது 50 வது அரங்கேற்ற மாணவியை கடந்த 29.09.2019 அன்று மேடையேற்றி னார்.
13ஆண்டுகள் ஆடல் கலை பயின்று தேறிய செல்வி நிரோஷா ஜெயதாஸ் திருமதி கௌசலா ஆனந்தராஜா அவர்களின் 50வது அரங்கேற்ற மாணவியாகத் திகழ்ந்துள்ளார். அரங்கேற்ற முதலாவது மாணவி முதல் 50வது மாணவி வரையான வர்களில் ஒருசிலர் தவிர்த்த ஏனையோர் வருகை புரிந்து அரங்கினை அலங்கரித்தனர்.
அரங்கேற்ற நிறைவில் மேடைக்கு வந்த அத்தனை மாணவிகளும் ஆசிரியையை வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.
பின்னர் கேக் வெட்டிப் பரிமாறி மகிந்தனர்.
ஆடல்கலை ஆசிரியை திருமதி கௌசலா ஆனந்தராஜா அவர்களின் கடந்த 30ஆண்டுகால புலம் பெயர் வாழ் கலைத்துறைப் பயணத்தில் இந்நாள் ஒரு பொன் நாள்.

Image may contain: 23 people, people smiling, people standing