சிதைவு…கவிஞர் தயாநிதி

தேடல்
கலைந்து
உறவுகள்
குலைந்து
அறிவும்
ஆற்றலும்
அடங்கும்
நிலை காண்..

உலகம்
சுருங்கி
உள்ளம்
கையில்
வரை படம்.
வாழ்க்கை
முறைகளும்
மாறிடும்
அவலம் தொடர்.

நன்மைகள்
நலிந்து
தின்மைகள்
பெருகி
நேரம் சுருங்கி
பாரம் கூடி
திசைகள்
மாறி தினமும்
போராட்டம்.

பாசம்
தொலைத்தவர்
பருவம்
கடந்தவர்
கனவில்
வாழந்தவர்
நட்பில்
நனைந்து
புது ஜென்மம்
எடுத்தவர்
ஏற்றம் காண்பதும்
இக்காலமே.

ஆக்கம் கவிஞர்தயாநிதி