சில நொடிகள்…!கவிதை ஜெசுதா யோ

கண்களை மூடி
கனவுக்குள்
சில நொடிகள்…

பருவம் எய்தா
பள்ளிக்காலம்
வீதியெங்கும்
விழாக்கோலம்..

நண்பர்கள் கூடியே
நடத்திடும் நாடகம்
பயமென்பது உள்ளுக்குள்
நம் வயததை மறந்திடுமே…

மழைக்கால நேரம்
ஒரு குடையில் இருவர்
இரு துவிச்சக்கரவண்டியில்..

பாதி நனைந்து மீதி காய்ந்து
மகிழ்வான சிரிப்பொலி
வானைப் பிழந்திடும்..

ஊர் கிட்ட
மெதுவாக பேசி
நல்லபிள்ளை போல்
வீடு செல்லும் நேரங்கள்..

எண்ணிப் பார்க்கையில்
இனித்திடும் வாழ்க்கை
எம் பிள்ளைகளுக்கு
இல்லையே அந்த வாழ்க்கை

நினைக்கும் அக்கணம்
கண்களில் ஏனோ
சில நீர்த் துளிகள்
என்னையும் மீறி…“*

ஆக்கம் ஜெசுதா யோ