***சென்று விடு சீக்கிரம் ****

ஏகாந்தமான நடு-இரவினிலே
என்னவள் அருகில் இருக்கையிலே
ஏனடி நீயும் கள்ளத்தனமாய் வந்து,
என் கண்ணுறங்கம் கலைத்துமே
என்னை நிதமும் வஞ்சிக்கிறாயோ?.
*
எந்தன் முன்னாள் காதலியே.
எத்தனையோ இனிய இரவுகள்
எவருக்குமே தெரியாமல்
என்னையுன் அரவணைப்பிலிட்டு
ஏகசுகம் தந்திருப்பாய், மறவேனதை.
*
என் உயிரிலும் மேலான காதலியே
எந்நாளிலும் உன் நினைவுகளை
என் மனதில் இருந்து யாராலும்
எடுத்தெறிந்து விட முடியாது.
*.
எனக்கென ஒருத்தி வந்த பின்னும்
எழிலோவியமே இனியொரு போதும்
என்னைத் தொந்தரவு செய்யாதே .
என்னவள் விழித்தால் கலங்கிடுவாள்
*
ஏராளம் இளைஞர்கள் உனக்காய்
ஏங்கித் தவித்திருபார்கள், அவர்களை
ஏற்றுக்கொண்டு களித்திரு கண்ணே.
என்னை மட்டும் விட்டு விடு தேனே.
*.
எனக்காகவே தரையிறங்கி வந்த
என்னிலாவே!! சென்று விடு சீக்கிரம்.
எங்குமே பனி படர்ந்திருக்கு
எனக்ககோ பணி காத்திருக்கு .

நிலா நேசன் .