***சோர்ந்து போகிறேனடி ***

****சோர்ந்து போகிறேனடி ****
உன் தோள்களில் சாய்கையிலே நல்ல
——தோழமை தெரியுதடி பெண்ணே.
உன் கைகளைக் கோர்க்கையிலே எந்தன்
——களைப்புகள் நீங்குதடி கண்ணே.
உன் கன்னத்தில் கன்னம் வைக்க பல
——கனவுகள் வருகுதடி கிளியே.
உன் அருகில் நான் நிற்கையிலே நான்
——அனைத்தும் அயத்துப் போகிறேனடி.
உன்னை சொந்தமென எண்ணுகையில்
—சுகத்தால் நான் சோர்ந்தே போகிறேனடி.
சுகநேசன்