தவறை மன்னி..

கவலை மறக்க
குவளை ஏந்திக்..
கிணற்றுத் தவளையானேன்
மனதை சலவை செய்ய
என் தவறை மன்னி..
புதுப் பறவையாவேன்
நிலவைக் கூட ,
களங்கம் சொல்லும்
கயவர் கூட்டம்
என் நிலையைச் சொல்ல
கைகள் கொட்டிச் சிரிக்கக் கூடும்
மதுவைத் தொட்டு
மரணம் தேடும் மடமைக் கூட்டம்
மனதை விட்டும்
மதுவை அகற்ற அறிவைத் தரட்டும்
கவித்தென்றல் ஏரூர்