தீயில்

தீயில் 
எரிகின்றது இனம்,
வஞ்சச் சாவில் 
விழுகின்றது தினம்,
தேடுவாரற்று 
கிடக்கின்றது பாசம்,
இருளோடு இருளாய் 
உருத்தெரியாமல் 
ஊமையாய் 
கிடக்கிறது கனவுகள், 
திவலைகளின் 
பேரலையால் மட்டுமே இந்த 
தீயை கட்டுபடுத்த முடியும், 
அந்த கவலை நமக்கு மட்டுமே
வாழ்வேறி வருகின்றது இறையே..

தே.பிரியன்