***துணிவே துணை **** கவிதை சிசுநேசன்

கருப்பையில் இடம் கொடுத்து மண்ணில்
-கால்பதிக்க கருணை செய்த கற்பகமே
விருப்பை மட்டுமே மகவுமேல் வீசும்
-விண்ணுலகத் தேவதை நீயே தாயே
பொறுப்பை உன்னோடு விட்டு விட்டு
-போலி நாடகமாடும் ஆண்மக்களிடம் நீயும்
மறுப்பைக் காட்டாது மானமிழந்த மாதே
-மடியில் கட்டிக் கொண்டாயே மகவை இன்று .
சிரிப்பைக் காட்டி கன்னியரை களவாடும்
-சீர்கெட்ட தெரு நாய்களை இனியாவது நாம்
செருப்பைக்கொண்டு தாக்கித் தெருவில்
-சேதாரம் செய்யவேண்டும் எம் மக்களே
துணிப்பையில் கட்டிய சிசுவுடன் தெருவிலவள்
-துணிவை மட்டும் துணையாக கொண்டவளே.
சிசுநேசன்
இதய தோழன்

Merken

Merken