நடந்திருக்கு


நம்ப
முடியாதவை
நடப்பதும்..

நடக்க
கூடாதது
நடந்ததும்.

எல்லாம்
நடக்கும்
என்பதும்
தீர்க்க தரிசனமே…

ஒன்றாகி
நின்றனர்
ஒத்தூதி அழித்தனர்..

வல்லரசு
வல்லூறுகளும்
வால் பிடித்தனர்..

ஆட்டம்
போட்டவர்
அடங்க மறுத்தவர்

நாட்டை
சுருட்டி
சுடுகாடாக்கியவர்
கூட்டுக்குள்
குளப்பம் கும்மியடிக்குது.

அகிலமே
இன்று வாய்
பிளந்து நிற்க
ஐ நா பேச்சிழக்க
காட்சிகள் விரிகின்றது..

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி