நான் எழுதுவது..!கவிதை கவிஞர் தயாநிதி

 

நித்தம்
உன் நினைப்பில்
சித்தம்
கலங்கிய பாவையானேன்.

ஏங்கும்
விழிதனில்
தூக்கம் கலைந்திடும்
கன்னியானேன்…

காரணம்
அறியா மாற்றங்களால்
கவிதைக்கு
சொந்தக்காரியானேன்.

கிறுக்கிய வரிகளில்
சறுக்கி வீழ்ந்து
பித்தம் பிடித்த
கிறுக்கியாயானேன்,

திரும்பிடும்
திசைகள் யாவும்
நின் திருமுகம் தேடும்
யுவதியானேன்..,

காதல்
அரும்பியதும் உனை
விரும்பியதும்
விளைந்திடுமா
வினையாகிடுமா..

கனவுகள் கரும்பா
இல்லை வேம்பா
உன் மனம் இரும்பா
விடை நீ சொல்லாயோ…

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken