நிலம்நோக்கி!கவிதை மன்னார் பெனில்

நிலம்நோக்கி
வெட்கப்பட்டு நகம்கடிக்கும்
என் அத்தை வீட்டு சித்திரமே
நீ போகும் பாதையெங்கும்
பாவிப்பயலிவன் உனைத்தேடியே
உன்பின்னால் வருகின்றேனடி

நீயோ எனைக் கண்டவுடன்
தொட்டவுடன் இமைமூடும்
தொட்டில் சிணுங்கிபோல
நாணித்தலை குனிகின்றாயே

அருகே வந்து
ஆயிரம் கதைபேச ஆசைதான்
உன் ஓரப்பார்வை பதிலுக்காய்
கொஞ்சம் தூரவே நிற்கின்றேனடி

மாமன் பெற்ற மரிக்கொழுந்தே
உன் கருவிழியால் ஒருமுறைபார்
சீர் கொண்டு நான் ஊரோடு வாறேன்
உன் சங்குக் கழுத்துக்கு
தங்கத்தாலி நான் தாறேன்

ஆக்கம் மன்னார் பெனில்