நிலையில்லா வாழ்வு !

யார் நீ புரிகிறதா
புரியாத உலகதில்
தெரியாத நாடக்கதில்
நடிகராய் வந்தவனே
புரிகிறதா உன் வாழ்வின் நிலை

ஆதியில் தோண்றி
ஆண்டோர்கள்தொடங்கிய வைக்க
அன்னையும் தந்தையும்
எழுதிய கவிதை நாம்
பல்லவியும் சரணமும்
படைத்தவன் கைதனிலே
சொல்வதுவும் செய்வதுவும்
சுழல்வதுவும் அவன் செயலே

இயற்கையில் வளம் யாவும்
இருக்கின்ற உலகத்திலே
இருப்பதுவும் போவதுவும்
இடைவந்த மனிதர்களே
இன்பமும் துன்பமும்
இருகக்கின்ற வாழ்விதிலே
இறுதியை நினைத்துப்பார்
இவ்வாழ்வு உனதில்லையே
படைத்தவன் ஆட்டிவைக்க
பாம்பாக ஆடுகிறோம்
பலர் பார்க்க ஒருநாளில்
பாடையிலே போகின்றோம் !

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 05.08.2021 உருவான நேரம் காலை20.40 மணி