நேர்த்தியானவன்..

கனிவும்
பணிவும்
தெளிவும்
அழகிய குரலும்
அமையப் பெற்றவன்…

அறிவுப்புத்
துறையில்
உச்சமெனினும்
உண்மையில்
சக அறிவிப்பாளரை
மதித்து வாய்ப் பளிப்பவன்..

மேடையில்
ஒலிவாங்கியுடன்
மல்லுக் கட்டுவதில்லை
இரத்தின சுருக்கமாக
நிகழ்ச்சிகளை
நகர்த்துவது
இவனது சிறப்பு..

தாயகக்
கலைஞர்களை
உரமிட்டு
வளரப்பது
இவன் கனவு.
மூத்த கலைஞரை
அரவணைப்பதில்
ஆர்வலன்..

அரங்குகள்
அதிரும் மதுரக்
குரலோன்.
மண்ணும்
மக்களும் மனப்பதிவில்
இயன்றவரை
இயங்குகின்றான்..

தளங்கள்
ஊடகங்கள்
கவனம் கொள்ளாத
போதிலும்
பேர் சொல்லும்
அறிவிப்பாளர்களில்
முல்லை மோகன்
இருக்கின்றார்
வாழ்த்துவோம்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி