பிரான்சில் களைகட்டிய தமிழர் திருநாள் நிகழ்வுகள் !

தைத்திருநாளாம் தமிழர் திருநாள் நிகழ்வுகள் தலைநகர் பரிஸ் உட்பட பல்வேறு இடங்களில் இன்று ஞாயிறுக்கிழமை களைகட்டியிருந்ததது.

சமகாலத்தில் தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் தேசங்கள் எங்கும் வெகுசிறப்பாக இடம்பெறுகின்ற பொதுப்பொங்கலிடல் எனும் தமிழர் திருநாள் பெருநிகழ்வின் முதல்விதையினை, இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சில் முன்கை எடுத்திருந்த சிலம்பு அமைப்பு, தலைநகர் பரிசில் வெகுசிறப்பாக முன்னெடுத்திருந்தது.

தமிழர்களின் பண்பாட்டு அரசியலை எடுத்தியம்பும் வகையில், பொதுப்பொங்கலிடல், பறையிசை, தமிழர் உணவுக்கண்காட்சி, தமிழர் ஆவணங்கள், அகரம் எழுதுதல், திருக்குறல் என ‚தமிழால் பறைந்து, தமிழால் நிறைந்த‘ ஓர் நிகழ்வாக தமிழர் திருநாள் நிகழ்வு அமைந்திருந்தது.