பூக்களை (ப்) பறிக்காதீர்கள்..!கவிதை.ரதிமோகன்

 

பச்சாதாபமற்ற மனம் படைத்த
பாதகர் உங்கள் கைகளில்தவழுகின்ற
விளையாட்டுபொம்மைகளா
இந்தப் பச்சிளம் பெண்பூக்கள்?

இச்சைக்கொண்டு இளந்தளிர்களோடு
பாலியல் இன்பத்தில் திளைத்து
கொன்றும் புதைத்தும் எக்காளமிடும்
உங்கள் கொட்டத்தை அடக்குவது யார்

கள்ளம் கபடமற்ற சிறுசுகளை
சில கண அற்ப சுகத்திற்காக
கசக்கி எறியும் வெறியர்களே
ஒரு கணம் சிந்திக்க மாட்டீர்களா..

உங்களை ஈன்றவளும் பெண்தானே
ஈவிரக்கம் சற்றும் இல்லையா உமக்கு
சட்டத்தாலும் தண்டிக்க முடியாது
பட்டம் பெற்ற நீதவானும் இங்கு கலக்கத்தில்…

காமுகப் பிசாசுகளை காட்டேறிகளை
கண்டதுண்டமாக வெட்டி தொலைத்தாலும் அடங்குமா
இந்த கோபத்தின் வெறி…?

ஆக்கம் ரதிமோகன்