***மூத்தவள் என்னும் பாத்திரம் ****


மூத்தவளாய் எனைப்பெற்று, காத்தவளும்,
மூச்சை விடுகயில் கையளித்த பொறுப்பிது.
கூத்தும் கும்மாளமுமாய் இருந்த குடும்பமது
குலவிளக்கு அணைந்ததால் ஆன திருப்பமிது.
காத்து நின்ற தந்தையும் ,எமை,காக்கவென்றே,
கட்டிவந்த ,சிற்றன்னையோடு சீவிக்கலானார்.
நேத்துவரை பள்ளியில் நான் கெட்டிக்காரி,
நிலைமறியதால் நானின்று வேலைக்காரி.
ஆத்தங்கரையில் அகிலாவும் தோழிகளோடு,
அன்ன ஊஞ்சல் கட்டி ஆடுகிறாள் அங்கே.
பாத்திரபண்டங்களை கழுவி நானுமிங்கு
பாலிய பருவத்திலே ஒரு பாத்திரமானேன்.
மூத்தவளாய் பிறந்துவிட்டேன் என்செய்ய
முழுக்குடும்பமுமே என் கையிலானதின்று.
சேத்து வைத்த சொத்தாய் தம்பிகளும்,என்
சேய்போலெனை ,காப்பரென காத்திருக்கிறேன்
பொறுப்பு நேசன் .