இவனுக்குள்…கவிதை கவிஞர் தயாநிதி

மனிதம்
தொலைந்த
மண்ணில்
புனிதம்
தொலைந்த
பூமியில்
பிறந்தது
தோஷமா…..

வன்முறை
அறியாது
நடப்பதும்
புரியாது
போர் ஒன்று
கடந்த பூமியில்
பேர் சொல்ல
தெரியாமல்
தெருவோரக்
கருப் பிரசவம்….

சம்மந்தம்
இல்லாத
சம்மந்தக்
கலப்பில்
கருவுற்ற
கதையறியாத
பிரசவம்…

சிற்றின்ப
சிதறல்
சீர் கெட்ட
போக்கால்
யார் பெற்ற
பிள்ளையோ
ஏனிந்த புறக்கணிப்பு…

விழிகளில்
விரக்தியின்
வீச்சு…
கை விட்டால்
விளைவுகள்
விபரீதமாகலாம்.
நளை இவனது
மாற்றங்கள்…..

அரவணைப்பும்
ஆறுதலும்
அன்பும் தேடும்
இவனுக்குள்
பூகம்பம் புடம்
போடுமுன்
வழிகாட்டினால்
பழிகளால்
மீளலாம்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி