வவுனியாவில் நடைபெற்ற மகிழம்பூவும் அறுகம்புல்லும் நாவல் வெளியிடப்பட்டது.

ஞாயிறன்று வவுனியாவில்
மிகச் சிறப்பாக நடைபெற்ற மகிழம்பூவும் அறுகம்புல்லும் நாவல் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கெளரவ அதிதியாக அழைக்கப்பட்டமையை இட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். தீபதிலகை (லண்டன்) கிருஷ்ணவேணி அவர்களினால் உருவாக்கப்பட்ட இந்நாவல் நயினாதீவின் மண்வாசனையை சிலப்பதிகாரம் மணிமேகலை இலக்கியங்களோடு கலந்து சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
யோ. புரட்சி அவர்களின் ஏற்பாட்டில் கற்ற சமூகத்தின ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் NS கிருஷ்ணன் கதைப் பாடல் அனைவரையும் கவர்ந்தது . சுவிர்சலாந்து இலண்டன் இத்தாலி இந்தியா போன்ற நாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுத் துளிகள்.

<கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்