****விஷமூட்டிகள்****

 


பாசம் காட்டி உரிமையோடு
பரிவுகாட்டி உறவாடிட இன்று
பாரினில் நல்லுறவுகள் நலிந்து போனதடா.
*
வாசம் வீசுமந்த அன்புதனை
வாசனைத் திரவியமாக்கி,இங்கு
வாடைக்காக பூசும் உறவுகளே, அதிகமடா.
*
கோஷம் போட்டுமுன்னைக்
கோலாகலமாக கொண்டாடியே
கோபுர உச்சிக்கு கொண்டு செல்வாரடா
*
வேசம் போட்டு வாழ்விலே, நல்ல
வேடிக்கையும் காட்டியே,அங்கு
வேளைபார்த்து விஷமூட்டுவர் கவனமடா
*
மோசம்செய்யும் முகங்களை நீயும்
மோப்பமிட்டுக் கண்டறிந்து
முளையிலேயே கிள்ளி எறிந்திட்டா.
*
நாசம் செய்து , உன் நெஞ்சிலே
நயவஞ்சக வேல் பாய்ச்சிட ,நீயும்
நட்டாற்றில் தத்தளிக்க வேண்டாமடா .
வேஷ நேசன்..