மறக்க முடியா மே 18……

மறக்க முடியா மே 18……
ஊரிழந்து உறவிழந்து
உடன்பிறப்புகள் இழந்து
உண்ண உணவுமின்றி
உதவி செய்ய யார் வருவாரென
உள்ளக்குமுறல் பொங்க
ஊசலாடிய உயிர்களுக்கு
உலகெல்லாம் கூடி
உதிரத்தால் செய்த
அபிடேகம் மே 18
கொத்துக் குண்டு
கொத்துக் கொத்தாய் வெடிக்க
நச்சுவாயு
நாலாபுறமும் வீச
துடிதுடித்து துண்டு துண்டாய்
வீழ்ந்தது தொப்புள்கொடி
பந்தமெல்லாம்..
ஆண்டு ஒன்பது நினைவலைகள்
சுமந்து மாறாத ரணங்களுடன்